Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் கிணறு தோண்டிய சம்பவம்

ஆகஸ்டு 18, 2019 11:20

சென்னை: சென்னை டி.பி.சத்திரத்தில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் கிணறு தோண்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 

டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது வீட்டில், கடந்த ஆண்டு தாயத்து கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் மந்திரவாதி சுரேஷ் என்பவரிடம் சென்று குறி கேட்டுள்ளனர். ராஜாவின் வீட்டில் செய்வினை இருப்பதால், துர்காரியங்கள் நடக்கும் எனக் கூறியுள்ளார். 

அதற்கு ஏற்ப, அடுத்தடுத்து, சில துக்க காரியங்கள் நடந்துள்ளன. இதனால், மந்திரவாதி சுரேஷிடம் மீண்டும் சென்ற போது, செய்வினை தகட்டை எடுக்க வேண்டும் எனக் கூறியதால், வீட்டின் நடுவில் ராஜா குழித் தோண்டியுள்ளார். அருகில், காவல் நிலையம் இருந்ததால், போலீசாருக்கு தெரியாமலேயே, இரவு நேரங்களில், 21 அடி வரை வீட்டின் நடுவில் கிணறு போல் குழி தோண்டியுள்ளனர். 

இரவு நேரங்களில், அந்த வீட்டின் நடவடிக்கையைக் கண்காணித்த போலீசார், சென்று விசாரணை நடத்தினர். அப்போது, செய்வினையை எடுப்பதற்காக வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டது தெரியவந்தது. போலீசாரின் அறிவுரையை ஏற்று, தற்போது குழியினுள் மணலைக் கொட்டி அதை மூடும் பணியில் ராஜா குடும்பத்தினர் ஈடுபட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்